Monday, October 8, 2018

கண்ணன் வந்தான் ....!!!

கனிவாய் அழைக்க கண்ணன் வந்தான்
இனிதாய்க் குழலை இசைத்து வந்தான்
தனிமை தவிப்பைத் தணிக்க வந்தான்
புனித னாகப் பொலிவாய் வந்தான் !
இனிதாய்க் குழலை இசைத்து வந்தான்
மனத்தில் நிறைந்து மகிழச் செய்தான்
புனித னாகப் பொலிவாய் வந்தான்
வனையும் கவியில் வடிவாய் வந்தான் !
மனத்தில் நிறைந்து மகிழச் செய்தான்
நினைத்த போது நிழலாய் வந்தான்
வனையும் கவியில் வடிவாய் வந்தான்
பனித்த விழியில் பரிவைக் கண்டான் !
நினைத்த போது நிழலாய் வந்தான்
நனைக்கும் மழைபோல் நயந்து வந்தான்
பனித்த விழியில் பரிவைக் கண்டான்
வனிதை என்னை மயக்கி விட்டான் !

No comments:

Post a Comment