Monday, October 8, 2018

சந்த வேற்றொலி வெண்டுறை



நதியோடும் வழியெங்கும் நாணல்புல் அசைந்தாட
நளினம் கொஞ்சும் !
கதிராடும் கழனியிலே காற்றுடனே கதைபேசிக் 
கண்கள் துஞ்சும் !
மதியின் வரவில் மனமுந் துள்ளக் 
கொதித்த நினைவும் குளிர்ந்தி டாதோ ?
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment