Monday, October 8, 2018

வெண்பாக்கள்

ஈற்றடிக்கு வெண்பா!
**********************
#நெஞ்சத்தில்_நிற்கும்_நிறைந்து!
கண்ணால் கதைபேசிக் காத லுறவாடி
வண்ணமலர்ச் சோலையில் வந்தணைத்(து) - அன்புடன்
பஞ்சனைய செவ்விதழால் பாவையவள் தந்தமுத்தம்
நெஞ்சத்தில் நிற்கும் நிறைந்து.
சற்றும் விழிகள் சலிக்காமல் பார்க்க,வான்
முற்றத்தில் கோலம் முளைத்திருக்கும் - பற்பல
வண்ணத்தில் பூத்து வளைந்தழகாய்த் தோன்றுமே
விண்ணில் விழுந்த விதை.

No comments:

Post a Comment