Monday, October 8, 2018

ராகத்தில் வந்த ரசம் ...!!!

ஈற்றடிக்கு வெண்பா....!!!
*************************
மங்கள மார்கழியில் மாலைப் பொழுதினில்
சங்கீத முள்ளத்தைத் தாலாட்டும்! - பொங்கிடும்
சோகத்தி லும்சுவைக்கும் தூய பிலஹரி
ராகத்தில் வந்த ரசம்.
காற்றில் தவழ்ந்துவந்து காதோரம் தேன்பாய்ச்சும்
ஊற்றாய்ப் பெருகி உளமுருக்கும்! - வீற்றபடி
பாகவதர் மெய்யுருகிப் பாடிய பைரவி
ராகத்தில் வந்த ரசம்.
அள்ளிப் பருகிட ஆவலுடன் காத்திருந்து
தெள்ளுதமிழ்ப் பாட்டைச் செவிகேட்க - உள்ளத்தின்
தாகந் தணிக்குமோ சாயா தரங்கிணி
ராகத்தில் வந்த ரசம்.
சாயாதரங்கிணி - இராகத்தின் பெயர்

No comments:

Post a Comment