சொற்பின்வரு நிலையணி வெண்பா !!
****************************************************
களைகள் பிடுங்கிக் களைத்திருந் தாலும்
களையாய் முகம்விளங்கக் கண்டு - களிப்புடனக்
கன்னியிடம் தன்னுள்ளக் காதலைச் சொல்லிட
கன்னஞ் சிவந்தாள் கனிந்து.
பொருள் பின்வரும்நிலை யணி வெண்பா !!
**************************************************
தண்டை யொலித்திடும் தாள்களில்; காற்சிலம்பும்
தண்கழலில் கொஞ்சிடும்; சந்தமுடன் - தண்டமிழ்ப்
பாக்களைப் பாடிப் பதமலர் பற்றிடக்
காக்கும் குகனடியைக் காண்.
****************************************************
களைகள் பிடுங்கிக் களைத்திருந் தாலும்
களையாய் முகம்விளங்கக் கண்டு - களிப்புடனக்
கன்னியிடம் தன்னுள்ளக் காதலைச் சொல்லிட
கன்னஞ் சிவந்தாள் கனிந்து.
பொருள் பின்வரும்நிலை யணி வெண்பா !!
**************************************************
தண்டை யொலித்திடும் தாள்களில்; காற்சிலம்பும்
தண்கழலில் கொஞ்சிடும்; சந்தமுடன் - தண்டமிழ்ப்
பாக்களைப் பாடிப் பதமலர் பற்றிடக்
காக்கும் குகனடியைக் காண்.
சொற்பொருள் பின்வரு நிலையணி வெண்பா
விண்ணழகு மின்னொளிரும் வெண்ணிலவோ பேரழகு
கண்சிமிட்டும் மீனழகு காரழகு ! - மண்செழிக்கக்
கொட்டும் மழையழகு கோல மயிலழகு
வட்டக் கதிரழகை வாழ்த்து .
மலரின் மணமினிது; வைய மொளிரப்
புலரும் பொழுதினிது; பொன்போல் - நிலவினிது;
கொஞ்சும் குரலில் குழவி மொழியினிது;
அஞ்சுகம் பேச்சினி தாம்.
கண்சிமிட்டும் மீனழகு காரழகு ! - மண்செழிக்கக்
கொட்டும் மழையழகு கோல மயிலழகு
வட்டக் கதிரழகை வாழ்த்து .
மலரின் மணமினிது; வைய மொளிரப்
புலரும் பொழுதினிது; பொன்போல் - நிலவினிது;
கொஞ்சும் குரலில் குழவி மொழியினிது;
அஞ்சுகம் பேச்சினி தாம்.
No comments:
Post a Comment