பொன்னந்தி மாலையில் போனவளைக் காணாமல்
என்னாச்சோ ஏதாச்சோ என்மகளுக்(கு)- என்றபடி
வாட்டமுற்ற பேதை மனம்பதைத்தாள் அல்லிலவள்
காட்டுவழி போய்வரக் கண்டு.
கற்றறிந்தோர் மன்றில் கவினுற ஈற்றடிக்கு
அற்புதமாய் வெண்பா அளித்திட - நற்றமிழ்ப்
பற்றோடு பொற்புடன் பாட்டியற்றும் பாவலர்தம்
சொற்பெருக்கால் பொங்கும் சுழல்.
அயர்வின்றி நாளும் அறுதி வரையில்
சுயமா யுழைத்தல் சுகமே! - முயற்சியில்
சற்றும் மனம்தளராத் தன்னம்பிக் கையேயென்
வெற்றிக்கு நான்போடும் வித்து.
படமெடுக்கு முன்னைப் படத்தில்கண் டாலே
நடுங்கிடு வேனன்று நானே! - அட!சும்மா
நில்லென் னருகில் நெளியாமல் நாகமே!
செல்ஃபி படமெடுக்கச் சேர்ந்து.
( கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு வெண்பா)
என்னாச்சோ ஏதாச்சோ என்மகளுக்(கு)- என்றபடி
வாட்டமுற்ற பேதை மனம்பதைத்தாள் அல்லிலவள்
காட்டுவழி போய்வரக் கண்டு.
கற்றறிந்தோர் மன்றில் கவினுற ஈற்றடிக்கு
அற்புதமாய் வெண்பா அளித்திட - நற்றமிழ்ப்
பற்றோடு பொற்புடன் பாட்டியற்றும் பாவலர்தம்
சொற்பெருக்கால் பொங்கும் சுழல்.
அயர்வின்றி நாளும் அறுதி வரையில்
சுயமா யுழைத்தல் சுகமே! - முயற்சியில்
சற்றும் மனம்தளராத் தன்னம்பிக் கையேயென்
வெற்றிக்கு நான்போடும் வித்து.
படமெடுக்கு முன்னைப் படத்தில்கண் டாலே
நடுங்கிடு வேனன்று நானே! - அட!சும்மா
நில்லென் னருகில் நெளியாமல் நாகமே!
செல்ஃபி படமெடுக்கச் சேர்ந்து.
( கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு வெண்பா)
No comments:
Post a Comment