Tuesday, October 2, 2018

'முள்'ளில் தொடங்கி 'மலர்' என்று முடியும் வெண்பாக்கள் ...!!!





முள்ளாய் உறவினர் முன்னென் மனம்கிழித்தாய் 
கள்ளமிலாக் காதலைக் கண்டிலனே! - உள்ளளவும் 
ஓடாகத் தேய்ந்தே உருக்குலைந் தாலும்நான் 
வாடா நெகிழி மலர். 

முள்ளிருந்து குத்திடினும் மொட்டவிழ்ந்த பூநாடித் 
துள்ளலுடன் பொன்வண்டு சுற்றிவரும்! - கள்ளுண்ணும் 
ஆசையுடன் ஆர்ப்பரித்(து) ஆடிவரும் அவ்வண்டை 
வாசத்தா லீர்க்கும் மலர்.

No comments:

Post a Comment