Tuesday, March 13, 2018

தீர்த்திடுவான் நன்றே !

பாதிமதி நதிசூடித் திரிசூல மேந்திப்
***பாம்பணிந்து மான்மழுவு மிருகையில் தாங்கி 
ஆதிரையில் பொற்சபையி லிடப்பாதந் தூக்கி 
***ஆனந்த மாய்நடன மாடல்வல் லானை 
சோதிவடி வானவனை நான்மறைகள் போற்றும் 
***தோடுடைய செவியனவன் திருநாமஞ் சொல்லி
வேதியர்கள் பண்ணிசைக்க வீதியுலா வந்து
***வேண்டுமடி யார்வினைகள் தீர்த்திடுவான் நன்றே !

No comments:

Post a Comment