Wednesday, March 14, 2018

அந்தி .... முதற்சொல்

அந்தி வானின் அழகு கோலம்
சிந்தை மயக்கும் சிவந்த மேகம்
பந்தல் போட பரிதி மறையும் 
விந்தை நிகழும் விண்ணில் தினமே !
அந்திமாலை இளந்தென்றல் அகங்குளிரச் செய்யும்
மந்திரமும் போட்டாற்போல் மனமதனைக் கொய்யும்
செந்தூரம் பூசியதாய்ச் சிவந்துவானம் கெஞ்சும்
சந்திரனும் பையவந்து சம்மதித்துக் கொஞ்சும் !!

No comments:

Post a Comment