Tuesday, March 27, 2018

சூட்டுவேனே !!

ஆற்றில் நீந்தும் கெண்டை மீனை 
***அன்பே உன்றன் கண்ணில் கண்டேன் !
காற்றில் வந்த உன்றன் பாட்டு 
***காதில் தேனாய்ப் பாயக் கண்டேன் !
ஊற்றெ டுத்த காத லாலென்
***உள்ளம் பூத்தே ஆடக் கண்டேன்  !
ஏற்றுக் கொண்டால் வான வில்லை  
***எட்டிக் கொய்து சூட்டு வேனே ....!!!

No comments:

Post a Comment