Wednesday, March 14, 2018

சிந்தையினிக்க வருவாளோ ??

தென்றல் தவழ்ந்துவரத் தென்னங் கீற்றசையத்
திங்கள் முகங்காட்டும் நேரம் !
பொன்னாய் ஒளிவீசிப் பொலிவாய் முகில்திரைக்குள்
புதைந்த கதிர்மறைந்து போகும் !
கன்னல் மொழிபேசிக் கருத்தைக் கவர்ந்தவளைக் 
கண்கள் எதிர்பார்த்துப் பூக்கும் !
அன்பில் அகமலர அள்ளும் அவள்நினைவில்
அன்றில் புள்ளுளறல் கேட்கும் !
அன்னம் நீந்திவர ஆடும் சிற்றலையின்
அழகோ இதயத்தை யள்ளும் !
மின்னும் தாரகைகள் மெல்ல கண்சிமிட்ட
மிஞ்சும் உணர்வலைகள் கொல்லும்!
பின்னல் சடையினிலே பிச்சி சூடியவள்
பித்தா யாக்கிவிட்டாள் உள்ளம்!
சின்ன இதழ்விரித்துச் சிந்தும் மதுமலராய்ச்
சிந்தை யினிக்கவரு வாளோ ??
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment