Sunday, March 18, 2018

ஆனந்தக் களிப்பு ...!!!

ஏழு மலைகளைத் தாண்டி - நிற்கும் 
***எம்பிரான் சேவடி யைத்தொழ வேண்டி 
பாழு மனத்திலோர் ஆசை - கொண்டு 
***பாவிநான் பக்தியாய்ச் செய்தேனே பூசை !

கோவிந்தா கோவிந்தா என்றே - என் 
***கூக்குரல் கேட்டதோ கூப்பிட்டான் இன்றே !
ஆவித் துடித்திடச் சென்றேன் - அந்த 
***ஆன்மீக நாட்டத்தில் தேனமு துண்டேன் !

வேங்கட வாசனைக் கண்டேன் - என் 
***மேனி சிலிர்த்திடப் பூரித்து நின்றேன் !
பாங்காய வன்திருக் கோலம் - வந்து
***பார்ப்பவர் நெஞ்சில் பதிந்திடும் நாளும் !

சங்குடன் சக்கரம் கொண்டு - சேவை 
***சாதிக்கும் எம்பெரு மானெழில் கண்டு 
பொங்கி வழிந்தது பாட்டு - நீயும் 
***பூத்தாடு ஆனந்தத்  தோடிதைக் கேட்டு !!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment