பொன்னந்தி மாலையி லே - பூக்கள்
***பூத்துக்கு லுங்கிடும் சோலையி லே !
சின்னக்கு யில்கூவு தே - சேர்ந்து
***செல்லமாய்க் கிள்ளையும் கொஞ்சிடு தே !!
பொன்வண்டு சுற்றிவ ரும் - அது
***பூவுக்குள் தேனுண்டு பாட்டிசைக் கும் !
அன்னமி ணையுட னே - அங்கு
***அன்புடன் தண்ணீரில் நீந்திடு மே !!
மேகத்தைக் கண்டது வோ - தன்
***மேனிசி லிர்த்திட நின்றது வோ ?
தோகைவி ரித்தாடு தே - மஞ்ஞை
***தோம்திமித் தோம்தாளத் தோடாடு தே !!
காவிநி றக்கதி ரோன் - மேற்கில்
***கண்மறை வாய்ச்சென்று ஓய்வெடுப் பான்!
வாவிக்குள் தாமரை யும் - சற்று
***வாட்டமுற் றேயிதழ் கூம்பிவி டும் !!
மெல்லயி ருள்பட ரும் - அங்கு
***மெல்லிசை யாயிளந் தென்றல்வீ சும் !
அல்லிமு கம்விரி யும் - வெண்
***அம்புலி வானில்த வழ்ந்துவ ரும் !!
காதல்நி னைவுக ளே - என்
***கண்மணி யைவரச் சொல்லுங்க ளே !
கீதமி சைத்திடு வேன் - அதைக்
***கேட்டவள் வந்திடில் பூத்திடு வேன் !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment