தவழ்ந்திடு மழகினில்
உவகையும் பெருகிடும்
கவலைகள் விலக்கிடும்
தவப்பயன் மழலையே !
நவின்றிடும் மொழியதும்
செவிகளி லினித்திடும்
தவிப்புகள் தணித்திடும்
கவின்சிலை மழலையே !
நதியினில் அலையென
மதிதனை மயக்கிடும்
புதியன புகட்டிடும்
அதிசயம் மழலையே !
( வஞ்சித் தாழிசை )
No comments:
Post a Comment