Wednesday, March 14, 2018

தாங்க மாட்டேனே ...!!!

எதையும் தாங்கு முளந்தந்தாய்
***இன்னு மேனோ வதைக்கின்றாய் !
விதைத்து வளர்த்தாய் மரமாக
***விழுதாய்த் தாங்க ஏன்மறந்தாய் ?
புதைத்துப் பூட்டி வைத்தாலும் 
***பொங்கி யெழும்பும் நினைவலைகள்
இதையும் கடத்தி விடுவாயேல்
***இறைவா வுனக்கு நன்றிசொல்வேன் !!
சுமைதான் என்றே புரிந்தாலும்,
***சுகமாய்த் தானே சுமக்கின்றேன்
அமைதி என்ற ஒன்றுமட்டும்
***அகத்தில் நிறைந்தால் உயிர்நனைவேன் !
உமையாள் பாலா உனைத்தானே
***உள்ள முருகி வேண்டுகிறேன் !
இமைக்குள் வைத்துக் காத்திடுவாய்
***இனியும் தாங்க மாட்டேனே !!

No comments:

Post a Comment