Tuesday, March 13, 2018

இனி சுவைப்பதெங்கே ??


ஜல்ஜல்ஜல் என்றுபொம்மை கைதட்டும் ஓசை
***ஜவ்வுமிட்டாய் தானன்று குழந்தைகளின் ஆசை!
நல்லழகு வண்ணத்தில் வரிவரியாய் இருக்கும்
***நாக்கினிலே ஒட்டினாலும் கரைந்ததுவும் இனிக்கும்!
பல்வடிவில் செய்தசத்தும் விற்பவரைக் கண்டால் 
***பாலருடன் வாங்கநிற்கும் பெரியோரும் உண்டே!
இல்லையின்று பொம்மைமிட்டாய் முன்னாள்போல் இங்கே
***ஏக்கமொன்று மனத்தோரம் இனிசுவைப்ப தெங்கே??
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment