இயற்கையழகு...!!!
*************************
நீரோடும் காவிரியில் நீந்துகின்ற சிற்றலைகள்
ஏரோடும் நெல்வயலை இன்பமுடன் கண்டோடச்
சீரோடு வானுலவும் வெண்ணிலவைத் தொட்டணைக்கக்
காரோடும் கோலத்தைக் காண்.
இஃதின்றேல் ....!!!
************************
நீரின்றேல் வாழ்வு நிலத்தில் கிடையாது
தேரின்றேல் வீதியில் தெய்வமுலா வந்திடாது
மாரியின்றேல் தாவரங்கள் மண்ணில் செழிக்காது
காரின்றேல் வானழகா காது.
( ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment