Tuesday, March 27, 2018

நீர் - முதல் சொல்

இயற்கையழகு...!!!
*************************
நீரோடும் காவிரியில் நீந்துகின்ற சிற்றலைகள் 
ஏரோடும் நெல்வயலை இன்பமுடன் கண்டோடச் 
சீரோடு வானுலவும் வெண்ணிலவைத் தொட்டணைக்கக்
காரோடும் கோலத்தைக் காண்.

இஃதின்றேல் ....!!!
************************
நீரின்றேல் வாழ்வு நிலத்தில் கிடையாது 
தேரின்றேல் வீதியில் தெய்வமுலா வந்திடாது 
மாரியின்றேல் தாவரங்கள் மண்ணில் செழிக்காது  
காரின்றேல் வானழகா காது.

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment