Tuesday, March 13, 2018

வல்லமை வாய்ந்ததே ...!!!

அன்னை தந்தையைப் பேணிடும் பிள்ளையின்
***அன்பில் மூழ்கிய பெற்றவர் வாழ்த்திடத்
துன்பம் யாவையும் நீங்கிடும்; தோல்வியும்
***தோற்றே வோடிடும்; வெற்றிகள் கிட்டிடும்;
இன்பம் பூத்திடுஞ் சோலையாய் இல்லறம் 
***என்றும் நல்மணத் தோடுவி ளங்கிடும்;
பொன்னாய் மின்னிடும்; பெற்றவர் நெஞ்சினில்
***பொங்கும் வாழ்த்ததும் வல்லமை வாய்ந்ததே !!
(கட்டளைக் கலிப்பா )

No comments:

Post a Comment