Wednesday, March 14, 2018

சிங்காரப் பைங்கிளியே ...!!!

சிங்காரப் பைங்கிளியே அசைந்சைந்து வாராய்!
செவ்வலகால் கொத்தியொரு சீட்டெடுத்துத் தாராய்!
இங்கிதமாய் நற்சேதி எனக்கின்று வந்தால்
இதயத்தில் அன்பொழுக நெல்மணிகள் தருவேன்!
செங்கனிவாய் யெழில்கண்டு வடித்திடுவேன் பாட்டு
சிந்தையெலாம் இனித்திடுமுன் கொஞ்சுமொழி கேட்டு!
தங்கத்தில் இருந்தாலும் கூண்டுனக்குச் சிறைதான்
தட்டியதைத் திறந்திடுவேன் பறந்தோடு வாயே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment