மஞ்சள் பூசி நீராடிய
தமிழ் மகள் போல்
நாணங்கொண்டு
தலை சாய்த்து
ஒயிலாக காற்றில்
அங்குமிங்கும் ஆட ....
ஆகாய சூரியனுக்கு
அழகான உன் மேல்
காதல் பூத்ததோ ...?
அதனால் தான்
ஆதவன் வரவுகாண
முகம் மலர்ந்தாயோ .....?
முழுக்க மலருமுன்
முங்கி மதுவுண்டு
மையலான பட்டாம்பூச்சிமேல்
பொறாமை கொண்டதனால்
மாலையில் பகலவனும்
மறைந்து போயினனோ ....??
தமிழ் மகள் போல்
நாணங்கொண்டு
தலை சாய்த்து
ஒயிலாக காற்றில்
அங்குமிங்கும் ஆட ....
ஆகாய சூரியனுக்கு
அழகான உன் மேல்
காதல் பூத்ததோ ...?
அதனால் தான்
ஆதவன் வரவுகாண
முகம் மலர்ந்தாயோ .....?
முழுக்க மலருமுன்
முங்கி மதுவுண்டு
மையலான பட்டாம்பூச்சிமேல்
பொறாமை கொண்டதனால்
மாலையில் பகலவனும்
மறைந்து போயினனோ ....??
No comments:
Post a Comment