ஒற்றைக்கால் இல்லையென
****ஒருநாளும் சோர்ந்ததில்லை
அற்றைக்கிரை தேடுதற்கு
****அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !
****ஒருநாளும் சோர்ந்ததில்லை
அற்றைக்கிரை தேடுதற்கு
****அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !
பெற்றமகன் துணையிருக்க
****பெருமகிழ்வு கூடிடுதே
விற்றிடுவேன் பலூனூதி
****விரட்டிடுவேன் வறுமைதனை !
****பெருமகிழ்வு கூடிடுதே
விற்றிடுவேன் பலூனூதி
****விரட்டிடுவேன் வறுமைதனை !
உற்றதுணை யாயெனக்கு
****உதவுமிரு ஊன்றுகோலே
பற்றற்ற வாழ்க்கையிதே
****பழக்கமாக ஆயிற்றே !
****உதவுமிரு ஊன்றுகோலே
பற்றற்ற வாழ்க்கையிதே
****பழக்கமாக ஆயிற்றே !
கற்காத காரணத்தால்
****கவலையென்னை வாட்டுவதால்
கற்பிப்பேன் பிள்ளைக்கு
****கடமையது எந்தனுக்கு !
****கவலையென்னை வாட்டுவதால்
கற்பிப்பேன் பிள்ளைக்கு
****கடமையது எந்தனுக்கு !
குற்றுயிராய்க் கிடந்தாலும்
****குனிவுவர விடமாட்டேன்
நற்பேரும் நானெடுப்பேன்
****நன்மைகளும் செய்திடுவேன் !
****குனிவுவர விடமாட்டேன்
நற்பேரும் நானெடுப்பேன்
****நன்மைகளும் செய்திடுவேன் !
சுற்றியுள்ள பசும்வயலும்
****சுவர்க்கம்தான் எங்களுக்கு
வற்றாத வரமாக
****வசமாகும் வானமுமே ….!!
இந்த வாரம் வல்லமையில் சிறந்த கவிஞர் என்ற பாராட்டு பெற்றுத் தந்த கவிதை
****சுவர்க்கம்தான் எங்களுக்கு
வற்றாத வரமாக
****வசமாகும் வானமுமே ….!!
இந்த வாரம் வல்லமையில் சிறந்த கவிஞர் என்ற பாராட்டு பெற்றுத் தந்த கவிதை
No comments:
Post a Comment