அத்தானென்னப் புடிக்கலையா
அன்பாசுத்தி வந்தாலும்
அதட்டிதெனம் வெரட்டுறியே !
அட்டக்கருப்பா இருந்தாலும்
அம்சமாதான நானிருக்கேன்
அறிவெனக்கு மட்டுன்னாலும்
அழகிலென்ன கொறச்சல்கண்ட !
அரிவாமீச புடிக்கலையா
அளவுகொஞ்சம் கொறச்சுக்குறேன்
அக்குள்வாடப் புடிக்கலையா
அரப்புதேச்சி குளிச்சிவாறேன் !
அடுப்பூதப் பழகித்தாறேன்
அரிசிச்சோறு ஆக்கித்தாறேன்
அயரமீனு வாங்கிவாறேன்
அரிஞ்சிக்கொழம்பும் வச்சிதாறேன் !
அந்தமூணு நாளுவந்தா
அக்கறையாப் பாத்துக்குவேன்
அலுப்பாநீ இருந்தாக்கா
அமுக்கிடுவேன் காலுகைய !
அந்திசாயும் நேரத்துலே
அல்வாமல்லி வாங்கிவாறேன்
அசடுன்னு நெனச்சியென்ன
அசட்டநீ செய்யாதே !
அடிக்கரும்பா இனிக்குறியே
அடிவானமா செவக்குறியே
அடிக்கடிமுகம் வெட்டுறியே
அப்பளமாமனச நொறுக்குறியே !
அர்த்தசாமக் கனவில்வந்து
அன்னாடம் படுத்துறியே
அற்பமாயென்ன எண்ணாத
அரவணச்சி வச்சிக்குவேன் !
அய்யனாரு கோயிலில
அலகுபோட நேந்துக்கிட்டேன்
அன்னமேநீ சம்மதிச்சா
அடுத்தநிமிஷம் கட்டிக்குவேன் ....!!!
No comments:
Post a Comment