Monday, May 11, 2015

அழியாது ஆயுளுக்கும் ....!!



அலையாடும் கரையோரம் 
அழகான மணற்சிற்பம் 
அன்பிற்கடை யாளமாக  
அக்கறையாய்ச் செதுக்கிட்டேன்
அர்ப்பணிப்பேன் உனக்காக 
அன்பேநீ   திரும்பிப்பார்  !
அடிவானம் கருத்திருச்சு
அடைமழைக்கும் வாய்ப்பிருக்கு 
அலைகளெல்லாம் ஆர்ப்பரித்து 
அருகினிலே வருகிறது
அச்சமென்னுள்  தோன்றிடுது 
அழிந்திடுமோ சிற்பமென ….!
அதற்குள்நீ சீக்கிரமாய்  
அலைபேசிக் காமராவில் 
அடுக்கடுக்காய்ப் படம்பிடிப்பாய்  
அசலழிந்து போனாலும் 
அற்புதமாய்ப்  பதிந்தநகல் 
அழியாது ஆயுளுக்கும் …!!

 

No comments:

Post a Comment