Tuesday, May 19, 2015

வசமாகா இதயம் உண்டோ ??



பவழ பர்வத மேனியை 
மரகத தருக்கள் மறைக்க ... 

நீல வான சாலையில் 
வைர சூரியன் உலவ .... 

கதிர் ஒளியில் காட்டருவி 
வைடூரியம் போல் மின்ன .... 

விருட்சம் விரித்த மலர்களும் 
கோமேதகமாய் பிரகாசிக்க .... 

புத்துணர்ச்சி பொங்கும் காலையிலே 
புஷ்பராகம் புள்ளினம் இசைக்க .... 

முத்துச் சிரிப்பினில் இயற்கையும் 
மாணிக்கமாய் மனம் மயக்க ..... 

நவரத்தினக் காட்சி கண்டு 
வசமாகா இதயம் உண்டோ ......???

No comments:

Post a Comment