Tuesday, May 19, 2015

இசைக்குறள் ....!!




இன்பத்துள் இன்பம் இசையின்பம் அவ்வின்பம் 
இன்பத்துள் எல்லாந் தலை . 

சங்கீதம் யார்யார்வாய்க் கேட்பினும் அக்கீதம் 
இங்கிதம் தானே தெளிவு . 

சுருதியில்லாக்  கீதம் அழகோ ? அழகே 
சுருதிலயம் தப்பா இசை . 

சுரமேழுள் நல்லிசைய டங்கும் அதுவும் 
வரமாக வாணி அருள் . 

உருகும் இதயமும் நல்லிசைக் கேட்க 
மருகும் செவியுள் நுழைந்து . 

தரங்கம் தவழும் அலைகளும் மீட்டும் 
அரங்கினில் இன்னிசைக் கேட்டு . 

பட்டும் நகைநட்டும் இல்லாத கச்சேரி 
எட்டுத் திசையிலு மில் . 

தப்பிய தாளமும் சேரா சுருதியும் 
தப்பே இசையில் உணர் . 

ருசிக்காது சாகித்ய மில்லா இசையும் 
ரசிக்க முறையுடன் கல் . 

இசையில் லயிப்பார் சிறப்பார் இலரே 
வசையினில் வீழ்வார் வெறுப்பு .

No comments:

Post a Comment