Saturday, May 23, 2015

எந்தையே ....!!!


உதிரத்தால் தந்தாய் உயிரெனக்கு !வாழ்த்தி 
எதிலும் முதன்மையுறச் செய்தாய் -சதியோ 
விதிமுடிய கூற்றழைக்க விண்ணகம் போனாய் 
கதிகலங்கி நிற்கின்றேன் காண். 

உச்சியிலே முத்தமிட்டு உள்ளமதி லன்பொழுக 
கச்சிதமாய் வாழ்வில் கரைசேர்த்தாய் -நிச்சயமாய் 
என்வயிற்றில் தாயாய், பிறவியொன்று வாய்க்குமெனில் 
உன்னைச் சுமப்பேன் உயிர்த்து !

No comments:

Post a Comment