சியாமாவனம்
கவிச்சோலை
Thursday, May 28, 2015
வளைக்கை வரையும் வரம் ....!!!
ரதியோ? அதிரூப ராணியோ? விண்ணின்
மதியோ? மருண்டிடும் மானோ?- பதித்த
சிலையோ? அழகின் சிலிர்ப்பிவளோ? கோலக்
கலையோ? மயங்கினேன் கண்டு .
இதழின் சிரிப்போ இதயம் உருக்கும்
அதரச் சிவப்போ இழுக்கும் -வதனம்
களையாய் ஒளிரும், கவினுறக் கோலம்
வளைக்கை வரையும் வரம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment