Thursday, May 28, 2015

வளைக்கை வரையும் வரம் ....!!!



ரதியோ? அதிரூப ராணியோ? விண்ணின் 
மதியோ? மருண்டிடும் மானோ?- பதித்த
சிலையோ? அழகின் சிலிர்ப்பிவளோ? கோலக் 
கலையோ? மயங்கினேன் கண்டு .

இதழின் சிரிப்போ இதயம் உருக்கும் 
அதரச் சிவப்போ இழுக்கும் -வதனம் 
களையாய் ஒளிரும், கவினுறக் கோலம்  
வளைக்கை வரையும்  வரம் 

No comments:

Post a Comment