Tuesday, May 12, 2015

சித்திரம் பேசுதடி ...!!


கிளைதனிலே பசுங்கிளிகள் மையலுடன் கதைபேச 
வளைந்துவரும் வெள்ளருவி ஓசையுடன் கவிபாட
மயிலோடு பிணைமானும் கரையோரம் ரசித்திருக்க 
ஒயிலாக அசைந்தாடும் செடிகொடியும் களித்திருக்க 

குளிர்வளியும் இடைவருட  குமரியவள் மெய்சிலிர்க்க 
வளைகொஞ்சும் கையாலே மன்னவனின் மார்தழுவ 
மஞ்சமவன் நெஞ்சமென மலர்க்கொடியாள் சாய்ந்திருக்க 
தஞ்சமென்று வந்தவளைத் தன்மையுடன் அவனணைக்க  

தென்றலது தாலாட்டில் பசுந்தளிரும் தலையாட்ட 
அன்றலர்ந்த மலர்போலே அணங்கவளின் முகமொளிர
இயற்கையுடன் இணைந்திட்ட காதலரின் மனமினிக்க 
மயங்கவைத்தக் காட்சியிலே சித்திரமும் பேசுதடி ...!!!

No comments:

Post a Comment