Tuesday, May 19, 2015

செக்கச் சிவந்த ரோஜா ....!!!


செக்கச் சிவந்த ரோஜா 
சிங்கார ரோஜா 
செந்நிற இலையிடையே 
சிரிக்கும் அழகு ரோஜா ....!! 

இரத்தம் போல சிவந்ததேனோ 
இரகசியம் சொல்வாய் ? 
இயற்கை தந்த வரமே 
இதில் வியப்பென்ன என்றாய் ...!! 

காதல் சின்னம் நீயே என்ற 
கர்வமும் உண்டோ ...? 
கடவுள் தந்த பரிசேயென 
கருத்தும் சொன்னாய் ...!! 

சிந்தை மயங்க காளையவன் 
சிவந்த ரோசா உன்னை 
சிகை சூட்டி மகிழ்ந்திடவே 
சிலிர்த்தாள் பெண்ணே ....! 

அழியாத காதலுக்கு 
அர்த்தம் சொன்னாய் ...! 
அன்பான வாழ்க்கைக்கே 
அஸ்திவாரமானாய் ....!!

No comments:

Post a Comment