Tuesday, January 12, 2021

பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காய் காய் காய் காய் தேமா
காய் காய் காய் காய் தேமா
வண்டொன்று தேனுண்ண மலர்நாடி பறந்துசெலும் வேளை
வனப்பான சோலைதனில் மணம்பரவும் இளமஞ்சள் மாலை
மண்மணமும் நிறைந்திருக்க வளியிதமாய் வருடிவிட்டுக் கொஞ்சும்
மழைவருமென் றறிவிக்கும் வானவில்லில் பறிபோகும் நெஞ்சம்
கண்ணிரண்டு காத்திருக்கும் காதலுடன் அவள்வரவை நாடி
கனவுகளும் கற்பனையும் கலந்துவரக் கவிதைகளைப் பாடி
வண்ணவண்ண சிறுமலர்கள் மயக்குகின்ற அவன்குரலில் தஞ்சம்
மழைவருமுன் வஞ்சியவள் வருவாளோ என்றுமனம் கெஞ்சும் !!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment