வண்ணம் : 118
தனந்த தனனன தான தனதானா
தனந்த தனனன தான தனதானா
கடம்ப வனமிசை மேவு மெழிலாளே
கமழ்ந்த மரகத மேனி யுடையாளே
படர்ந்த தமிழ்நதி பாயு மழகூராம்
பளிங்கு மதுரையை யாளு மினியாளே
கடந்து செலுவினை யாவு மவளாலே
கலைந்து விலகிடும் வானில் முகிலேபோல்
தொடர்ந்து நிழலென நாளும் வருமீனாள்
சுகங்க ளடைமழை போலும் பொழிவாளே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment