Tuesday, January 12, 2021

அடிதோறும் முற்று மோனை அமைந்த வெண்பா ....!!!

 அடிதோறும் முற்று மோனை அமைந்த வெண்பா ....!!!

கன்னல் கனிரசமே கற்கண்டே கட்டழகே
சின்னவிதழ் தீண்டிச் சிலிர்ப்பூட்டுந் - தென்றலால்
புன்னகையில் பூத்த பொலிவுமிளிர் பொற்சிலையே
என்மனத்தி லென்று மிரு .
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment