அடிதோறும் தலையாகு எதுகை, இயைபுடன் எண்சீர் விருத்தம்....!!!
கண்ணோடு காண்பதெலாம் சொந்த மில்லை
காதலென்ற பாதையிலே முள்ளு மில்லை
பெண்ணோடு சொன்னதெலாம் உண்மை யில்லை
பித்தாக்கு மென்பதுவும் பொய்யு மில்லை
விண்ணோடு மேகத்திற்(கு) ஊட லில்லை
வெண்ணிலவு விளையாடத் தடையு மில்லை
மண்ணோடு வானுக்குக் கோப மில்லை
மழைநனையு மின்பத்திற் கெல்லை யில்லை !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment