வண்ணம் : 121
தனதன தனதன தனதானா
தனதன தனதன தனதானா
உமையவ ளொடுநட மிடுவோனே
உயர்கதி தரவரு மிறையோனே
எமபட ரணுகுமுன் விடைமீது
எளியனும் நலம்பெற விரைவாயே
குமரனு மழகுட னுபதேசம்
குருவென வருளிட மகிழ்வோனே
கமழ்சடை மிசைநதி மதியோடே
கயிலையி லுறைசிவ பெருமானே .
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment