தத்தத் தத்தத் தனதானா
தத்தத் தத்தத் தனதானா
மத்தத் திற்சுற் றிடுவோனால்
மட்டுப் பட்டுத் தவியாமல்
சுத்தத் தைப்பெற் றிடவேதான்
சுற்றிச் சுற்றித் தொழுவேனே
சித்தத் திற்குக் கனிவோடே
திட்பத் தைச்செப் பியநாதா
நத்திக் குட்டிப் பணிவேனே
நச்சுத் தொற்றைக் களைவாயே!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment