தனனா தனனா தனதானா
தனனா தனனா தனதானா
பதியாய் மலைமே லமர்வோனாம்
படைவீ டுடையா னருளாலே
கதிநீ யெனவே கவிமாலை
கனிவா யினிதே யணிசெய்தாய்!
முதிரா நகையோ டழகான
முருகோன் புகழ்பா டியநாதா
நிதமே பணிவே னுனைநானே
நிறைவா யுளமே குருநாதா!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment