Tuesday, January 12, 2021

அ வில் தொடங்கி ன வில் முடியும் காரிகை ...!!!

 அ வில் தொடங்கி  ன வில் முடியும் காரிகை ...!!!

அடங்காக் கிருமி அவனியைச் சுற்றி அழித்திடுதே
முடங்கிக் கிடப்பினும் மூச்சை நிறுத்த முனைந்திடுதே
நடக்கும் நிலையிதில் நாட்டின் நலனும் நலிந்திடுதே
விடியல் வரவை விரும்பி இறைவனை வேண்டுவனே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment