Tuesday, January 12, 2021

வண்ணம்- 110

 தத்ததன தானத் தனதானா

தத்ததன தானத் தனதானா

அத்தனுனை நாடித் தொழுவேனே
அச்சமது தீரப் பரிவோடே
பித்தனெனை ஆரத் தழுவாயோ
பெட்புடைய சேவற் கொடியோனே
பத்திசெயும் நேசர்க் குறவேநீ
பச்சைமயி லேறிக் கனிவோடே
இத்தருணம் வாசற் குருநாதா
இப்புவியி லேதொற் றொழியாதோ?
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment