தத்ததன தானத் தனதானா
தத்ததன தானத் தனதானா
அத்தனுனை நாடித் தொழுவேனே
அச்சமது தீரப் பரிவோடே
பித்தனெனை ஆரத் தழுவாயோ
பெட்புடைய சேவற் கொடியோனே
பத்திசெயும் நேசர்க் குறவேநீ
பச்சைமயி லேறிக் கனிவோடே
இத்தருணம் வாசற் குருநாதா
இப்புவியி லேதொற் றொழியாதோ?
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment