Tuesday, January 12, 2021

வண்ணம் -113

 வண்ணம் :113

தத்தனா தானனத் தனதான
தத்தனா தானனத் தனதான
பச்சைநூ லாடையிற் பொலிவோடே
பத்தியோ டாடையிற் கனிவாயோ
உச்சிமா காளியைத் தொழுவேனே
உற்றநோய் தீர்வதற் கருள்வாயே
பிச்சியால் மாலைகட் டுவனேயான்
பெற்றபே றாயதைக் கருதேனோ
இச்சையால் நானுனைப் புகழ்வேனே
இற்றைநாள் மாசினைக் களைவாயே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment