Tuesday, January 12, 2021

பொழிப்பெதுகை அமைந்த பஃறொடைவெண்பா ...!!!

 பொழிப்பெதுகை அமைந்த பஃறொடைவெண்பா ...!!!

எத்திக்கும் முன்னிற்கும் இத்தரணி யேவியக்கும்
முத்தமிழின் பேரழகு முத்தொளிரும் - நித்தம்
களைப்பகற்றும் கன்னலாம் கன்னித் தமிழே
இளமையா யென்று மெளிதாய் - வளமையாய்
முப்பாலில் பூத்திருக்கும் முப்போதும் நெஞ்சள்ளிச்
செப்பனிடும் வாழ்வெனச் செப்பு.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment