Tuesday, January 12, 2021

பன்னிருசீர் விருத்தம்...!!!

 பன்னிருசீர் விருத்தம்


விளம் மா விளம் மா
கூவிளம் தேமாங்காய் ( அரையடிக்கு )
செந்தமி ழாலே செந்திலாண் டவனின்
சேவடி போற்றேனோ ?
சிந்தையில் பூக்கும் பாடல்கள் கேட்டுச்
செம்முகம் பூப்பானோ ?
வந்தவர்க் கெல்லாம் அருள்மழை பொழியும்
வள்ளிம ணாளாவா !
மாயையை நீக்கி மயக்க மறுத்து
மாண்பினை நீயேதா !
கந்தனைப் பாடும் கடலலை யாவும்
காலடி பற்றாதா ?
காவடி யெடுத்துச் சேந்தனை யழைக்கக்
காவலாய் வாராயோ ?
அந்தகன் வருமுன் அவனைவி ரட்டும்
ஆறுதல் நீதானே !
அன்னையின் கரத்தால் வேலினை வாங்கி
அன்பொடு காப்பாயே !
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment