Tuesday, January 12, 2021

என் சொல்ல

மலர்களைப் பார்த்தேன் மணத்துடன் குலுங்கி

     மகிழ்வுடன் சிரித்தது செடியில்!

அலைகளைக் கண்டேன் அச்சமே யின்றி

     ஆர்ப்பரித் தெழுந்தது கடலில்!

நிலவது மிரவில் நிம்மதி யாக

     நிறைவுடன் ஒளிர்ந்தது வானில்!

உலகிலே மனிதன் உயிர்பயத் தோடே

   உலவிடும் நிலையையென் சொல்ல?


No comments:

Post a Comment