Wednesday, November 30, 2016

காவிரியே களித்தோடிவா ...!!!



தடைபோட்டுத் தடுத்தாலும் தமிழ்நாட்டின் வளம்காக்கத் 
****தயங்காமல் தவழ்ந்தோடிவா ! 
இடையூறு கொடுத்தாலும் இமைப்போதும் அசராமல் 
***இயல்பாக எதிர்த்தோடிவா ! 
விடைகூறி விரைவாக விவசாயம் செழித்தோங்க 
****விருப்போடு சிரித்தோடிவா ! 
புடைசூழ வருவோரின் புரியாத பகைமாற்றிப் 
****பொலிவோடு புரண்டோடிவா ! 

அடைத்தாலும் மறித்தாலும் அடங்காமல் திமிராக 
****அணைப்போரை இனங்காணவா ! 
மடைதாவி விளையாடி மருண்டோடும் கயல்மீனை 
****மறவாமல் உடன்கூட்டிவா ! 
நடைபோட்டு மிடுக்காக நதியேயுன் எழிலோடு 
****நலம்வாழக் குதித்தோடிவா ! 
கடைத்தேற வழிபார்த்து கருவாயுன் கவிகேட்டுக் 
****கனிவோடு களித்தாடிவா ....!!!

No comments:

Post a Comment