Wednesday, November 9, 2016

நாணமேன் ....???



மங்கையே பாராய்! நாணமேன் சொல்வாய்! 
****நாயகன் வருகையின் விளைவோ?
செங்கனி வாயில் செவ்விதழ் பூக்க 
****சிந்திய முத்தெனச் சிரிப்போ ?
தங்கமாய் மின்னும் தாரகை வுன்றன் 
****தாமரை நெஞ்சினில் சிலிர்ப்போ ?
திங்களின் ஒளியும் செம்முகில் வனப்பும் 
****சேர்ந்ததாய் அமைந்ததுன் அழகோ ....!!

மஞ்சுள முகத்தில் மங்கள மாக 
****மலர்ந்திடும் புன்னகை யிழுக்க 
அஞ்சன விழியும் அதிசயம் காட்ட 
****அன்னமுன் கைவளை குலுங்க 
கொஞ்சிடும் பேச்சில் குயிலிசை தோற்க 
****கொடியிடை அசைந்திடக் கண்டு 
வஞ்சியே அன்பாய் மன்னனும் அழைக்க 
****வந்திடு வெட்கமும் விட்டே ...!!

No comments:

Post a Comment