அன்றென்னை ஆருயிரே அன்பே இனியவளே
என்றெல்லாம் .கொஞ்சினாய் இன்சொல்லால்! - இன்றெனை
வன்மொழியால் வைதாய், மனம்துடிக்கக் கேட்கிறேன்
சொன்னது நீதானா சொல் .
உன்னையல்லால் யாரையும் உள்ளத்தி லும்நினையேன்
என்றாயே! கண்மணியே! ஏன்மறந்தாய்? - புன்னகையால்
வென்றவளே! என்றும் வெறுக்கமாட் டேனெனச்
சொன்னதும் நீதானா சொல் !
No comments:
Post a Comment