Tuesday, November 29, 2016

அவளும் நானும் ....!!!



அவளும் நானும் அன்பா லிணைந்தோம் 
உவகைப் பெருக்கால் உள்ளம் பூத்தோம் 
கவலை மறந்து கனவை வளர்த்தோம் 
சிவந்த இதயச் சிலிர்ப்பில் நெகிழ்ந்தோம் ! 

நிலவின் ஒளியில் நெஞ்சம் குளிர்ந்தோம் 
மலரின் மணத்தில் மயங்கிக் கிடந்தோம் 
குலவி தினமும் கொஞ்சி மகிழ்ந்தோம் 
புலனை வென்று புரிந்து நடந்தோம் ! 

அருவிக் கரையில் அவளும் நானும் 
பெருகும் நினைவில் பெருமை கொண்டோம் 
விருப்பத் தொடு விருந்தா யானோம் 
வருத்த மின்றி வளைய வந்தோம் ! 

கனிவாய்ப் பேசிக் காதல் வளர்த்தோம் 
இனிமை ததும்பும் இயற்கை ரசித்தோம் 
பனியில் நனைய பழுதும் மறந்தோம் 
புனிதம் காத்துப் புகழைப் பெற்றோம் ! 

அழகின் சிரிப்பில் அவளும் நானும் 
பழகிப் பார்த்துப் பயணம் தொடர்ந்தோம் 
எழிலாம் இனிய இயற்கை ரசித்தோம் 
விழியின் மொழியில் விதைத்தோம் அன்பை !

No comments:

Post a Comment