விண்பொய்த்தால் நீரின்றி விளைச்சல் குன்றும்
****வேதனைதான் விவசாயி வாழ்வில் மிஞ்சும் !
கண்போன்ற நிலமதுவும் காய்ந்து போக
****கண்ணீரில் உழவனவன் காலம் செல்லும் !
தண்ணிலவு வருமுன்பே விரைவாய் மேய்வாய்
****தனியாக பிறகசையும் போட்டுக் கொள்வாய் !
புண்ணாக்கு வேண்டாமே புல்லை மட்டும்
****புசித்துக்கொள் வயிறாற கிடைக்கும் போதே ...!!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment