Thursday, November 17, 2016

புசித்துக்கொள் வயிறாற கிடைக்கும் போதே ...!!!

விண்பொய்த்தால் நீரின்றி விளைச்சல் குன்றும் 
****வேதனைதான் விவசாயி வாழ்வில் மிஞ்சும் !
கண்போன்ற நிலமதுவும் காய்ந்து போக 
****கண்ணீரில் உழவனவன் காலம் செல்லும் !
தண்ணிலவு வருமுன்பே விரைவாய் மேய்வாய்
****தனியாக பிறகசையும் போட்டுக் கொள்வாய் !
புண்ணாக்கு வேண்டாமே புல்லை மட்டும் 
****புசித்துக்கொள் வயிறாற கிடைக்கும் போதே ...!!!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment