Tuesday, November 29, 2016

தனிச்சொல் வெண்பா ....!!!

கண்ணுக்கு ளுன்னைவைப்பேன்! காலமெல்லாம் காத்திருப்பேன்! 
எண்ணமெல்லாம் நீயாக ஏங்கிடுவேன்!- கண்ணம்மா ! 
வண்ணப்பா வொன்றை வடிவா யியற்றிடுவேன் 
பண்ணிசைத்துப் பாடிடுவேன் பார் . (1) 

சின்ன இடையினில் சேலை நழுவிடும் 
கன்னக் குழியும் கவிபாடும் - என்னவளின் 
புன்னகை யில்மனம் பூத்துக் குலுங்கிடும் 
பொன்னொளிர் மேனி பொலிவு . (2) 


தனிச்சொல் வெண்பா 
``````````````````````````````````` 
தனிச்சொல், வெண்பாவின் நான்கு அடிகளுக்கும் பொருந்திப் பொருள்தரவேண்டும்!

No comments:

Post a Comment