Thursday, November 24, 2016

கண்ணன் திருப்புகழ் ....!!!




தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத் - தனதானா
சீலமு லாவிய கோபியர் நெஞ்சத்
தோவிய மாயுறை மோகன னின்பொற்
சேவடி யேகதி யேயென யின்புற் - றிடுவேனோ
தேடியு மோடிடு பாசமு டன்சிட்
டாகது வாரகை யேகிவி ளங்கித்
தேவதை போலெழி லாளைவி ரும்பித் - தடுமாறும்
பாலனை மாயனை நேசமு டன்பித்
தானது போலுள மாகிட வஞ்சிப்
பாடலொ டாடிடு வோனைவ ணங்கிப் - பணிவேனே
பாவைய ராசையி னாலுனை நம்பிப்
பாசுர மேதின மோதிம யங்கிப்
பாவன மேபுரி ராதையி னன்பைப் - பெறுவோனே !
சோலையி லேகுழ லூதம யங்கித்
தோழியர் கூடிட லீலைநி ரம்பித்
தோகையர் பூவிழி பேசிட அந்திப் - பொழுதோடே
சூடிய பூவது வாடிடு முன்பட்
டாடையி லேயொரு சேடிந டுங்கிச்
சோதனை தீரவி னாவிடு கெஞ்சிக் - கனிவோடே
கோகுல வாசனை மாலையில் கொஞ்சிக்
காதலி னோடுகு லாவிட வொன்றிக்
கூடிய கோபிய ரோடும னஞ்சற் - றிளகாதோ
கோமள னேமது சூதன னின்பொய்க்
கோபமு மேயறி யாதவ னன்பிற்
கோதையி னோடுற வாடும னந்தப் - பெருமாளே !

No comments:

Post a Comment