Tuesday, November 29, 2016

நதிக்கரையினிலே ....!!!

ஆற்றோரப் பாதையெல்லாம் அடர்ந்தமரம் பூச்சொரியும் 
காற்றோடு நாணலதும் காதலுடன் வீசிவிடும் 
சேற்றோடு விராலுடனே சேல்கெண்டை போட்டியிடும் 
ஊற்றெடுக்கும் நினைவுகளில் உள்ளமதும் உடன்செல்லும் ! 

இணைபிரியா அன்னங்கள் இன்பமுடன் நீந்திவரும் 
பிணையுடனே கலைமானும் பிரியமுடன் நீர்குடிக்கும் 
துணையிருக்கும் வான்நிலவும் துயிலாமல் விழித்திருக்கும் 
அணைபோட்டுத் தடுத்தாலும் அடங்கிடுமோ நதியோ(யா)சை ? 

ஒற்றைக்கால் கொக்குகளும் உணவுக்காய் தவமிருக்கும் 
நிற்காமல் தவழ்கின்ற நீரலையில் நுரைபூக்கும் 
பொற்கிரணக் கதிர்விரிய புதுவெள்ளம் புன்னகைக்கும் 
சுற்றிவரும் வழியெங்கும் சுகராகம் மீட்டிடுமே 

No comments:

Post a Comment